Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!

Saturday, July 16, 2011

கர்ம வீரர் காமராஜர் - படிக்காத மேதை

கல்வி "கதாநாயகன்' : 15.07 - காமராஜரின் 109 வது பிறந்தநாள்

நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம் நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதர்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் பேர்புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர் பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர்

அரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப் பட்ட ஒரு மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சயரியமாக இருக்கிறது.தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர் மூத்தத் தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதிவியையே துறந்தவர்.

கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும் என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக் கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரச்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் தான் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாச்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவரின் பெயர் காமராஜர்.

தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

தமிழகத்தில் ஆரம்பத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தான் இலவச கல்வி சலுகை அளிக்கப்பட்டது. இச்சலுகையை பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957-58ம் ஆண்டில் காமராஜர் அரசு உத்தரவிட்டது. இதனால் பலரும் பலன் பெற்றனர். ஆண்டு வருமானம், ஆயிரத்து 200 ரூபாய்க்கு கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவச கல்வி என 1960ம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது. அதுவே, அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என 1962ல் மாற்றப்பட்டது. இதே ஆண்டு 6-11 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாயக்கல்வியாக அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954ம் ஆண்டில் 6 முதல் 11 வயது குழந்தைகளில், 45 சதவீதம் பேர் வரை மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80 சதவீதம் குழந்தைகள், பள்ளிக்கு சென்றனர். அதாவது, 1954ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963 பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்தது.

இடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல் ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். இது காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது. 1954ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது. கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் "ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை' என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. தேவையான அளவு வசதிகளுடன் கூடிய உயர்நிலைப்பள்ளிகள், தமிழகத்தில் ஐந்து கி.மீ., தூரத்துக்கு ஒன்றாக அமைந்தன. ஒரு சமுதாயம், வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வும் அவசியம். இதை உணர்ந்த காமராஜர் அரசு, கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்துக்கு இடம், கட்டடம், நூல்கள், பொருட்கள் ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன.

கல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர் : முன்னாள் முதல்வர் காமராஜருடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் விருதுநகர் புட்டு தெருவை சேர்ந்த சகோதாரர்கள் என்.கணேசன், என்.ஜெயராமன்.

செயல் வீரர்

காமராஜர் கட்சியில் தலைவராக இருந்தபோது முழுநேரத் தொண்டராவே இருந்தார்.

செயல், செயல், செயல் எனச் செயலில் கரைந்ததால் கர்ம வீரர் என்று புகழப்பட்டார் காமராஜர்.

‘நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று ‘பாரதி’யின் இலக்கணம் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும்.

காங்கிரஸ் காரர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள்.

2. சுதந்திரத்துக்குப் பின் கட்சியில் பங்கு கொண்டவர்கள்.

காமராஜர் இளமைக் காலம் தொட்டே இந்திய தேசியக் காங்கிரசில் இணைந்து முழுநேரச் செயல் வீரர் என்னும் முத்திரைக் குத்தப்பட்டார்.

பம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாடு, ‘செய் அல்லது செத்து மடி’ தீர்மானத்தை நினைவேற்றியது.

பம்பாய் காங்கிரசின் முடிவுகளை துண்டு பிரசுரங்ளாக நாடெங்கும் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.

1942 ஆகஸ்ட் 8 – ஆம் தேதி காங்கிரஸ் கூட்டிய, இம் மாநாட்டில்தான் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்தானம் நிறைவேறியது.

மாநாட்டுத் தீர்மானங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாடெங்கும் விநியோகித்து மக்கள் அறியச் செய்ய வேண்டும். அப்பொறுப்பை ஏற்று, காமராஜர் அவர்கள் துண்டுப் பிரசுரங்களோடு தமிழ்நாடு நோக்கி ரயிலேறினார்.

திரு. சஞ்சீவரெட்டி அவர்களும் தலைவருடன் வந்தார். எந்நேரமும் எந்த ரயில் நிலையத்தில் வைத்தும் கைதாகலாம் என்ற நிலையில் பயணமானார்கள்.
இடையில் கைதாகி விட்டால் மாநாட்டுத் தீர்மானங்கள், மக்களை அடையாமல் போய்விடும். எனவே தனக்கிடப்பட்ட வேலையை செய்த் முடிப்பதுவரை, எக்காரணம் கொண்டும் கைதாகிவிடக்கூடாது என்று முடிவு செய்துகொண்ட தலைவர் தலைவர் காமராஜர் அவர்கள், இடையில் அரக்கோணம் ரயில் நிலையத்திலேயே இறங்கிவிட்டார்.

அன்றிரவு ராணிப்பேட்டை கல்யாணராமையர் வீட்டில் தங்கிவிட்டு ஒரு வணிகரைப்போல் தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு கோணிப் பைகளையும் தூக்கியபடி மாறூ வேடத்தில், தமிழகமெங்கும் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகிக்க உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நேராக விருதுநகர் வந்தார் பெருந்தலைவர்.

தனக்கிடப்பட்ட செயலைத் தடையின்றிச் செய்து முடித்துவிட்டதால் தானாகவே விருதுநகர் காவல் நிலைய அதிகாரி திரு. எழுத்தச்சன் அவர்களை அழைத்துக் கைது செய்துகொள்ளும்படி கூறினார். இளமை முதலே பெற்றுக் கொண்ட செயலை எப்படியேனும் செய்து முடிக்கும் செயல் வீரராகவே கர்மவீரர் திகழ்ந்தார்கள்.

இந்தப் பயிற்சியும் பழக்கமும்தான் தமிழக அரசியலையும் இந்திய அரசியலையும் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு வந்தபோது செயல்புரிய வாய்ப்பாக அமைந்தது.

எல்லோர்க்கும் இலவசக் கல்வி என்றதை செயலாக்கத் துணிந்தபோது கல்விச் செயலாளர்களும் திட்ட வல்லுனர்களும் செலவைக் கணக்கிட்டுக் காட்டி ‘முடியாது’ – என்று கூறி விட்டார்கள்.

அப்போது காமராஜர் அவர்கள், ”முடியாது என்று சொல்லவா நீங்கள் வந்தீர்கள் முடியும்ண்ணேன், முடிக்க என்ன வழி என்பதை மட்டும் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டார்.

செயலை முடிப்பதில் செலவைப் பார்க்க கூடாது. செயலை முடிக்கச் செயலை மட்டுமே பார்க்க வேண்டும் என்று எண்ணும் செயல்வீரரே கர்மவீரர்.

திருச்சியில் ‘பெல்’ (BELL) நிறுவனம் அமைத்ததும் கரமவீர்ரின் செயல் வீரத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன்று உலகமெல்லாம் உற்பத்திப் பொருளை ஏற்றுமதி செய்யும் அந்த பெல் (BELL) நிறுவனம் காமராஜரின் செயல் வெற்றி எனலாம்.
மக்கள் பணியில், செயலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார் தலைவர். முடியும் என்ற நோக்கோடுதான் செயல் பணிகளைத் தொடங்க வேண்டும். திட்டமிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார்.

அந்த செயல் வெற்றிதான் அவர் காலத்தில் அணைக்கட்டுகளாக, மின் திட்டங்களாக, தொழிற்சாலைகளாக உருப்பெற்றன.

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான என். ஜெயராமன்(77) பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து கூறியதாவது: காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார். ""பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார் காமராஜர் . கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும் இத்திட்டத்திற்கு ஊக்கமளித்தார். தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .

பஞ்சு வியாபாரி என். கணேசன் (79) கூறியதாவது: காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், ""ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.

யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.

தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.

காமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம், என்றார்.

காமராஜ் இருந்தால் "காம்ராஜ்' : நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். பேசும் போது சுதந்திரத்திற்கு காரணமான மகாத்மா காந்தியடிகள் பற்றி குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதிகாரிகளை அழைக்கும் போது "ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர். பிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,""காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்,'' என, குறிப்பிட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=275571

Courtesy : www.dinamalar.com

------------------------------------------------------------

Courtesy : Sakthivel Palanisamy sir for sharing the below info.

படிக்காத மேதையின் சாதனைகள்! திரு காமராஜர் 1954 முதல் 1963 நடந்த அவர் ஆட்சி ஒன்பது ஆண்டுகளில், கட்டபட்ட அணைகள், மணிமுத்தாறு, வைகை, ஆழியார், சாத்தனூர் மற்றும் கிருஷ்ணகிரி அணைகள். அவர் கொண்டுவந்த நீர் பசன திட்டங்கள், கீழ் பவனி, மணி முத்தாறு, க...ாவேரி டெல்டா, வைகை, அமராவதி, ஆரணி ஆறு, புள்ளம்பாடி, பரம்பிக்குளம், நெய்யாறு. திரு காமராஜர் தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்த பெரிய தொழிற்சாலைகள், BHEL திருச்சி, நெய்வேலி நிலகரி தொழிற்சாலை, மணலி ரேபிநேரி, ஊட்டி போட்டோ பிளம்ஸ், பெரம்பூர் ரயில்வே பெட்டி தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை, ஊட்டி மற்றும் நெய்வேலியில் அனல் மின்நிலையங்கள் .......... எல்லாவற்றிற்கும் மேலாக எம் சிறுவர்க்கு மதிய உணவு திட்டம், தொழிற் கல்வி, முந்தைய ஆட்சியில் இருந்த பள்ளிகள் 12,000 அவர் ஆட்சியில் அவை 27,000 ................. - இப்படி திரு காமராஜரின் சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம். எல்லாவற்றிக்கும் மகுடம் அவர் என் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர். (இந்த தகவல் அனைத்தையும் சென்ற ஆண்டு கனடாவில் இருந்து ஒரு நண்பர் தினமலரில் எழுதியிருந்தார் அதை மீண்டும் காமராஜர் பிறந்தநாளில் நான் எழுதி உள்ளேன்) மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் காமராஜரின் ஆற்றலை யாரோடும் ஒப்பிட முடியாது. பெல் நிறுவனம் எப்படி வந்தது என்று தெரியுமா? காமராஜர் முதல்வராக இருந்த பொழுது பல மாநிலங்களின் போட்டிக்கு இடையே போராடி பெல் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். அப்பொழுது பெல் நிறுவனம் தொடங்க இடம் தேர்வு செய்யும் பனி திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. அனால் அவர்கள் நிறுவனம் தொடங்க தோதான இடம் இல்லை என்று சொல்ல, காமராஜர் அவர்களிடம் இதை சொல்லத்தான் அரசாங்கம் உங்களை சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளதா? என்று கேட்டுவிட்டு. பிறகு காமராஜர் அதிகாரிகளிடம் தான் திருச்சி வழியாக செல்லும் பொழுது ஒரு பெரிய விவசாயம் செய்யமுடியாத இடத்தை பார்த்ததாகவும் (தற்போது பெல் நிறுவனம் அமைந்துள்ள இடம்) அந்த இடத்தை போய் பார்த்து விட்டு வருமாறு சொன்னாராம். பிறகு அந்த அதிகாரிகள் காமராஜரிடம் வந்து அந்த இடம் நிறுவனம் தொடங்க மிகவும் பொருத்தமான இடம் என்று சொன்னார்களாம். இப்படி ஒரு தரிசு நிலத்தை வழயில் பார்த்த காமராஜர் அதை ஒரு தொழிற்சாலை ஆக்க கனவு கண்டு அதை மெய்யாக்கி காட்டினார். அனால் இன்றைய அரசியல் வாதிகள் கண்ணில் அதுபோல இடம் தென்பட்டால் வேலி போட்டு தன் பிள்ளைகள் பெயருக்கு பட்டா வாங்கி விடுவார்கள்.

http://www.perunthalaivar.org/english/life-history/

http://www.perunthalaivar.org/english/2008/01/25/karma-veerar/

http://en.wikipedia.org/wiki/K._Kamaraj


-----------------------------------------------------

நன்றி : http://urssimbu.blogspot.in

இவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்திருந்தால் நமது மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை, 1903 ஆம் ஆண்டு ஜீலை 15ந்தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர், ஏழ்மையான குடும்பம் ஏழ்மையின் காரணமாகவும் படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்விகற்க முடிந்தது

12 ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலைப் பார்த்தார் அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது, அவருக்கு 15 வயது ஆனபோது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16ஆவது அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார் அன்றிலிருந்து பல ஆண்டுகள் சவுகர்யம் பதிவி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.

1930ஆம் ஆண்டு ஏபரல் மாதம் வேதாரண்யத்தில் காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார் அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையில் கழித்திருக்கிறார் 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார் 1952ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்

மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலைமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார் அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு


அப்படி அவர் என்ன செய்தார் அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா! காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம் எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா “பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள் என்பதுதான்”

அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார் பழை பள்ளிகள் சீர் செய்யப்பட்டன ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார் எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார் ஏழைச் சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார்

ஜாதி வகுப்பு ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளி பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார் அவ்ர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழை போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார் அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம் ஆயின நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது




அவரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது வைகை அணை மணிமுத்தாறு அணை கீழ்பவானி அணை பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழில்கள் தமிழகத்தில் உருவாயின அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்

இப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கல் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார்

இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு அந்தத் திட்டத்திற்கே காமராஜர் திட்டம் என்றே பெயரிடப்பட்டது தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 3ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர் அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய் எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர் அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்

இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவிம் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர் அந்த இரண்டு தலைமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை “கிங்மேக்கர்” என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும் இப்படி தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால் ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டிலேயே குறியாக இருந்தார் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி தனது 72 ம் வயதில காலமானார்.



அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர் ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்கலை வாசிக்க கற்றுக்கொண்டார் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீட்டில் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தககளும்தான் பதவிக்குரிய பந்தா அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும் கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?



(இளையராஜாவின் இசையில் இந்த பாடல் நம்மை சொல்லிமாளாத சோகத்தில் ஆழ்த்தி விட்டுபோகிறது)

முறையான கல்வி இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறியாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வளவு செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும் நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும் சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம், அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும்.

நாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்!

“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”

இதன் ஒலியாக்கம் "96.8 ஒலி வானொலி சிங்கப்பூர்"
புகைப்படதொகுப்பு நண்பன் "GOOGLE"
இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கின்றேன்

மறக்காமல் உங்கள் வாக்குகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்

1 comment:

  1. Courtesy : Sakthivel Palanisamy sir for sharing the second part of above info.

    ReplyDelete

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.