Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!

Friday, August 16, 2013

பாட்டியின் ஞாபகம்

இப்போதெல்லாம் எனக்கு
பாட்டியின் ஞாபகம்
அடிக்கடி வருகிறது.

கொஞ்சம் அன்புக்காக
எனது சிறு புன்னகைக்காக
ஜீவனுக்குள்
பாசத்தின் ஜென்மத்தைப்
பதுக்கி வைத்திருந்த பாட்டி.

எனக்குத் தெரிந்து
பாட்டியின் நெடும் பயண நேரமே
சந்தைக்கும்
சமையலறைக்கும் இடைப்பட்ட தூரம் தான்.

கொல்லைப்புறத்தின்
பதனீர்ப்பானைகளுக்கிடையில்
பதியனிடப்பட்டு
பயிரானது தான் அவள் முதுமை!!

சருகுகள் பொறுக்குவதிலும்
சுள்ளிகள் சேகரிப்பதிலும்
ஓலை முடைவதிலுமாய்
அவள் வருடங்கள் முழுவதுமே
விறகுக்காய் விறகாகிப் போனது.

கிழக்குப் பக்கத்தில்
கட்டிவைத்திருந்த
கோழிக் கூட்டுக்குள்
முட்டைதேடி முட்டைதேடி
முடிந்துபோகும் காலைகள்.

சமையல் கட்டில்
சருகுக் கூட்டில்
கரிசல் காட்டில்..
இப்படியே மங்கிப் போகும்
மாலைப் பொழுதுகள்.

மண்ணெண்ணெய் விளக்கு
வெளிச்சத்தில்
விட்டில்களை விரட்டி விரட்டி
பாக்கு இடிப்பதிலேயே
முடிந்து போகும் இரவுகள்..

நினைவிருக்கிறது.
சின்னவயதில்
ஆசையாய் நெய் முறுக்கு தந்து
என்னைத் தழுவும் போதெல்லாம்
வழியும்
வெற்றிலைக்கறை கண்டு
விருப்பமின்றி ஒதுங்கியிருக்கிறேன்.

இப்போதெல்லாம்
சாப்பிட்டாயா ?
என்று கேட்கும் பாட்டியின் குரல்
அவ்வப்போது எதிரொலிக்கும்
ஆழ்மனதின் ஏதோ ஒரு எல்லையிலிருந்து.

பாட்டியிடம்
சாப்பிட்டாயா என்று
பாசத்தோடு ஒரே ஒருமுறை
கேட்கத் தோன்றுகிறது.

கால ஓட்டத்தில் ஏதேதோ மாற்றங்கள்
பதனீர் சட்டிகள்,
சருகு அடுப்புகள்,
மண்ணெண்ணெய் விளக்குகள்,
எல்லாம்..
எல்லாம் இறந்து விட்டன.
என் பாட்டியும்.

- Joseph Xavier Dasaian



தமிழ் என்பது

நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்

தமிழ் என்பது அடிப்படையில் ஒரு மொழி தானே, அதை ஏன் நீங்கள் வெறும் மொழி என்று பார்க்காமல் பல பெயர்களால் தனித்துவப்படுத்தி அழைக்கிறீர்கள்???

நான் அவரிடம் கூறினேன்..

உங்களைப் பெற்றவர்கள் அடிப்படையில் மனிதர்கள் தானே. அவர்களை ஏன் நீங்கள் மனிதர்கள் என அழைக்காமல் அப்பா அம்மா என்று மற்றவர்களிடமிருந்து தனித்துவப்படுத்தி அழைக்கிறீர்கள்? பெற்றெடுத்தவள் மட்டும் தான் தாயல்ல.. அடையாளம் தந்தவளும் தாய் தானே..

பதிலற்று நின்ற அவர் அவ்வாறு சொன்னதற்கு மன்னிப்பும் கேட்டார்.

Source  :  நல்லதோர் வீணை செய்தே.

ஆடி முடிந்தது ஆவணி வந்தது

Source : உலக தமிழ் மக்கள் இயக்கம்

நாளை ஆவணி மாதம் பிறப்பு
இன்று 1188 ம் ஆண்டு முடிந்து , நாளை 1189 ம் ஆண்டு ஆரம்பம் . சிம்ம மாத ஆரம்பம் .
(ஸ்ரீ பதி என்பவர் வானியல் மற்றும் ஜோதிஷத்தில் மிகவும் பாண்டித்தியம் மிக்கவர். அவருடைய கணிதம்தான் ஜோதிடத்தில் இன்றும் கையாளப்படுகிறது. ஜாதகங்கள் கணிக்கப் படுகின்றன).

தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இந்த முறைதான் பின் பற்றப்படுகிறது
நம் அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருவள்ளுவர் ஆண்டுக்கும் அடிப்படை ஸ்ரீபதி பத்ததிதான்.

ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது.

குறை ஒன்றும் இல்லை

ஓவியம்


மாலை 5 மணி அளவில் மயிலாடுதுறை மெயின் ரோட்டில் உள்ள சுவற்றில் வரையப்பட்ட ஓவியம் இது.....,
மயிலாடுதுறையில் பரவலாக பேசப்பட்ட செய்தி.....,
இந்த ஓவியம் வரைய எந்த வகையான கலர் பெயிண்டுகளும் பயன்படுத்த படவில்லை.....,
 பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் கலர் சாக்பீஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.....,

இந்த ஓவியத்தை வரைந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தோற்றம் அளித்தார்.....,
இவர் படம் வரையும் போது மக்கள் கூட்டமாக பார்த்தல் சிறிது போக்குவரத்து ஏற்ப்பட்டது.....,
இவர் இவ்வாறு தான் அணைத்து ஊர்களிலும் படம் வரைவதாக கூறப்படுகிறது..

1 of the POWERFUL IMAGE We came across


ONE OF THE MOST POWERFUL IMAGE WE CAME ACROSS:
- The 1st image referenced in the Vatican pedophilia.
- The 2nd image the child sexual abuse in tourism in Thailand.
- The 3rd refers to the war in Syria.
- The 4th image refers to trafficking in organs on the black market, where most of the victims are children of poor countries.
- The 5th refers to free U.S. weapons.
- The 6th image refers to obesity, blaming the big fast food companies.


Source  :  Most Viral Media

மனைவி அமைவதெல்லாம்!

(திருமண நாள் பதிவு)! முழுவதும் படிக்கவும்!

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும், பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும், கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நிறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால்..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன். இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன். எஸ்.ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன். கேரம், செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள். ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!

இந்த குமுதம், ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடைசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!

எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன்..!

எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள்...? ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது..!


கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம்.

ஆனால்..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது, வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன்..!

இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா..?

எதுக்கு வாங்குனீங்க..?

இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா..? கிரிக்கெட் பார்ப்பியா..?

எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது..!

(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும்)

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!

இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?

ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!

அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?

சரி எஸ்.ஜானகி புடிக்குமா ?

யாரு கிழவி போல இருக்குமே அதுவா ?

எஸ்.ஜானகியை கிழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம்...! எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம்...! துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்

இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சதை சமைச்சு போடணும் - இது என் அம்மா

நானும் அவளிடம் கேட்கிறேன்

உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு

அதெல்லாம் ஒன்னும் வேணாம்

இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்

பிடிக்குமென சிலதை சொல்ல

முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல..?

ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.

அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை சுக பிரசவம் தான் .

நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம், ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!

சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல், மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று..!

சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான்.

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி , இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன், கிரிக்கேட், எஸ்.ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல..!

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

ஆனால்...! இப்போது எங்களுக்குள்...! தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..!

- தமிழ் அமுதன்

Thursday, August 15, 2013

ஹன்ஷிகா

ஹன்ஷிகா தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையைத் தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான செலவுகளைச் செய்து வருகிறார்.

இந்த அரியச் செயலால் இதுவரை 21 அனாதை குழந்தைகள் அவருடைய பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இதுவன்றி சமூகசேவைகள் செய்வதற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இளம் வயதிலேயே சமூக நோக்கோடு அவர் செய்துவரும் இந்த அரியச் செயலை பாராட்டி, பிரபல பெண்கள் இதழான JFW (just for women) ஹன்சிகாவை இளம் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்தது.

via Nilani Naren
------------------------------------------

ஜெசிந்தா - கனவுடன் போராடும் பெண் மெக்கானிக்


கல்லூரி முதல்வர் கனவுடன் போராடும் பெண் மெக்கானிக்

வடபழனி துரைசாமி சாலையோரத்தில், வாகனங்களுக்கு கீழே படுத்து வேகமாகவும், லாவகமாகவும் பழுது பார்க்கும், பெண் மெக்கானிக் ஜெசிந்தாவின் செயல்பாடுகள், பார்ப்பவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கத் தான் செய்யும். ஆனால் அவருக்கு, வாகனங்களில் பழுது பார்க்கும் பணி அனைத்தும் அத்துப்படி.

வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளும் அவரிடம் உரையாடியதில் இருந்து...

* வாகனங்களில் என்னென்ன பழுதுகளை பார்க்கிறீர்கள்?
ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கிரீஸ் அடிப்பது, ஆயில் மாற்றுவது, கிளட்ச் ஒயர் மாற்றுவது மற்றும் வாகனங்களில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதுகளை சரி பார்ப்பேன்.

* யாரிடம் தொழில் பழகுனீங்க?
என் கணவர் ஜெயக்குமார் தான் என் குரு; அவர் ஆட்டோ ஓட்டுனர். வாகனங்களில் பழுது பார்ப்பதில் அடிப்படையான விஷயங்களையும், வாகனங்களுக்கு கிரீஸ் அடிப்பது குறித்தும் சொல்லி தந்தார். அதன் பின், அவ்வப்போது பழுது பார்த்துக் கொண்டே, நிறைய கற்று வருகிறேன்.

* மெக்கானிக் பணியில் விருப்பம் வந்தது எப்படி?
சூழ்நிலை தான் விருப்பமாக மாறியது. எனக்கு யாரும் உதவ முன் வராத போது, மெக்கானிக் பணியை ஆர்வத்துடன் எடுத்து செய்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன், என் மகன், வீட்டின் மேல்தளத்தில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 4 லட்சம் ரூபாய் தேவைப்பட்ட போது, நான் வேலை பார்த்த நிறுவனம் எனக்கு உதவவில்லை. போதிய பணம் இல்லாததால், என் மகன் இறந்துவிட்டான். அவனது இறப்பே என்னை, சுய தொழில் துவங்க தூண்டியது. அந்த நிமிடம், அந்த நிறுவனத்தை உதறிவிட்டு, இந்த தொழிலில் இறங்கி விட்டேன்.

* நிறுவனத்தில் வேலை பார்த்தீர்களா?
ஆமாம். டி.எம்.எல்.டி., என்கிற தொழிற்படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில், "சிஸ்டம் ஆப்ரேட்டராக' பணி புரிந்தேன்; பின், எம்.ஏ., முடித்தேன். தற்போது எம்.பில்., படித்து வருகிறேன். பிஎச்.டி., படிக்க வேண்டும் என்பது லட்சியம்.

* படிப்பு, நிறுவன வேலையெல்லாம் உதறிவிட்டு நடைபாதையில் எப்படி...?
துவக்கத்தில் சற்று கூச்சமாக தான் இருந்தது. பழுது பார்ப்பதில் ஆர்வம் வந்ததில், கூச்சம் தானாக போனது. பழுது பார்க்க வருவோரின் பாராட்டுகள், நம்பிக்கையையும், துணிச்சலையும் தந்தன.

* மீண்டும் நிறுவன வேலைகளுக்கு செல்ல விருப்பமில்லையா?
நான் இங்கு பார்க்கும் தொழிலில், தினமும், 500 ரூபாய் கிடைக்கிறது. என் மகளை பள்ளிக்கு அழைத்து சென்று வருவதற்கும், என் குடும்பத்தை பார்த்து கொள்ளவும் முடிகிறது. பிஎச்.டி., முடித்த பின், மீண்டும் கல்லூரியில் பணி புரியலாம் என்று யோசித்து வருகிறேன். கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து பணிபுரிந்து, கல்லூரி முதல்வர் பதவி வரை உயர வேண்டும் என்பதே என் லட்சியம்.

- Aatika Ashreen

Source : ரிலாக்ஸ் ப்ளீஸ் (ஆங்கிலத்திலும் Relaxplzz)

சுதந்திரம்


Nanbar  தழல் திருவண்ணாமலை avargalin Mugaputhaga suvatril idhai padithen, Yennal maruka mudiyavillai. Kasapana unmaigal dhan... Idho pagirgiren..
கொலைகளுக்காக கொண்டாடலாம்.

குண்டு வெடிப்புகளுக்காக கொண்டாடலாம் .


மீனவர்களை தொடர்ந்து பலி கொடுப்பதற்காக கொண்டாடலாம் 

அந்நிய நாடுகளின் அடிமையாய் இருக்கும் அரசு வாய்த்திருக்கிறதே அதை நினைத்து கொண்டாடலாம். 

கனிமவளங்களை சுரண்டுவதற்கு கட்டற்ற சுதந்திரம் இருக்கிறதே அதை கொண்டாடலாம் . 

குழுவாக இணைந்து யாரை வேண்டுமானாலும் வன்புணர்வு செய்ய முடியுமே அதற்காக கொண்டாடலாம் . 

பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடிகிற தேசத்தில் பிறந்ததற்காக கொண்டாடலாம் . 


ஒட்டு போட காசு கொடுக்கும் அரசியல் வாதிகளை வாழ்த்தி கொண்டாடலாம். 


சாதியின் பேரால் எத்தனை சவக்குழிகள் வேண்டுமானாலும் தோண்டலாமே அதற்காக கொண்டாடலாம். 


வெள்ளைக்காரனை விரட்டிவிட்டு அவனுடைய மொழிக்கும்,


பொருட்களுக்கும் அடிமையாய் இருக்கிறோமே அதற்காக கொண்டாடலாம்

எத்தனை பேரை எல்லையில் பலி கொடுத்தாலும் பொங்குவதோடு வடிந்துவிடும் பொங்கல் பானைகளை வைத்திருப்பதற்காக கொண்டாடலாம்

எல்லையில் காவு கொடுக்க வீரர்கள் இருக்கிறார்கள் .நாட்டில் காவு கொடுக்க எதையும் அறிந்து கொள்ள விரும்பாத செம்மறியாட்டு கூட்டமாய் மக்கள் இருக்கிறார்கள் என ஆட்சியாளர்கள் கொண்டாடலாம் .


குறைந்த பட்சம் குடித்து கும்மாளமிட ஒரு நாள் விடுமுறை கிடைத்தது என கொண்டாடலாம் 


ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே ..... 

Japanese schools - Can be a Role model

Source  :  Useful info 

In Japanese schools, the students don't get ANY exams until they reach grade four (the age of 10)! Why?
Because the goal for the first 3 years of schools is NOT to judge the child's knowledge or learning, but to establish good manners and to develop their character! 

Yes, that's what our scholars taught us:Manners BEFORE knowledge!
Should this method be implemented all over the world?

மரணத்தை நிச்சயித்து பிறக்கும் ஈராக் குழந்தைகள்



தொடரும் அணுக் கதிர்வீச்சின் தாக்கம். மரணத்தை நிச்சயித்து பிறக்கும் ஈராக் குழந்தைகள் !
2003 ஆம் ஆண்டு அமெரிக்கா பிரிட்டன் படைகள் ஈராக் நாட்டின் மீது போர் தொடுத்தது. அப்போது அவர்கள் அடர்த்தி குறைவான உரேனியம் ( Depleted Uranium) தாங்கிய ஆயுதங்கள் அளவிற்கு அதிகமாக பயன்படுத்தினர். இந்த வகையான அடர்த்தி குறைவான உரேனியம் அணு உலைகளில் இருந்து வெளியாகும் அணுக கழிவுகளில் இருந்தே தயாரிக்கப் படுகிறது என்பது தான் நாம் அறிய வேண்டிய தகவல்.

இந்த அணுக்கதிர் வீச்சு கொண்ட ஆயுதங்கள் 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் பயன்படுத்தினாலும், அதன் கதிர்வீச்சு தாக்கம் இன்றளவும் ஈராக் நாட்டின் நஜாப் , பாசுல்லா போன்ற நகரங்களில் பெருமளவில் காணப்படுகிறது. இங்கு பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் புற்று நோயுடனும், உடல் சிதைவடைந்த, உருக்குலைந்த நிலையிலேயே பிறக்கிறது. அப்படியே பிறந்துவிட்டாலும் இக்குழந்தைகள் ஒரு ஆண்டுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை என்பது வேதையான தகவல்.

ஈராக் போரின் போது அமெரிக்க ராணுவம் சுமார் 440,000 கிலோ அடர்த்தி குறைவான உரேனியம் பயன்படுத்தி உள்ளது . இதன் விளைவாக ஈராக் நாட்டிலுள்ள சுவர்கள், மணல் , செங்கற்கள், மற்றும் எல்லாப் பொருட்களில் இந்த உரேனியம் அணுத் துகள்கள் பதிந்து உள்ளது.

மேலும் புற்று நோயுடன் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களை சோதனை செய்த போது அவர்களின் முடிகளில் இந்த உரேனியம் அணுத் துகள்கள் இருப்பது கண்டறியப் பட்டது. இப்போது ஈராக் மருத்துவமனைகளில் சாதாரண சளி, இருமல் போன்ற நோய்களால் பாதிப்படைந்த குழந்தைகளை விட புற்று நோயினால் பாதிப்படைந்த குழந்தைகளே அதிகமாக காணப்படுகின்றனர்.

ஏன் இந்த வகையான அணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தியது ?

சாதாரண வெடிமருந்து பொருந்திய ஆயுதங்கள் பயன்படுத்தினால் அவைகள் ஓரளவு சேதத்தை உண்டு செய்தாலும் , உரேனியம் அணுத் துகள்களை தாங்கிய ஆயுதங்கள் , பெரிய சுவற்றை ஓட்டை போட்டு துளைக்கும் தன்மை உடையது. பெரிய போர் வாகனங்கள், டாங்கிகளை அழித்தொழிக்கும் வல்லமை பொருந்தியவை . அதனால் தான் இந்த அணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தியது.

இந்தப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும் , இங்கு அமெரிக்க விட்டுச் சென்ற அணுகதிர் வீச்சு எச்சங்கள் இந்த மண்ணல் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. இதை அவ்வளது எளிதில் இந்த மண்ணில் இருந்து நீக்க முடியாது. இந்த எச்சங்கள் இந்த மண்ணில் இருந்து நீங்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம் என ஆய்வாளர்களை தெரிவிக்கின்றனர் .

- See more at: http://newsalai.com/details/Depleted-Uranium-cause-for-cancer-among-Iraq-children.html#sthash.TYYN8VUi.dpuf

தேசிய கொடி மலர்கள்

நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம் ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன தெரியுமா ?????
இந்த கொடி மேலே ஏற அதாவது சுதந்திரம் பெற என்னற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது.

கங்கை புனித நீரா?


காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது. இதன் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கையில் தள்ளப்பட்டுக் கொல்லப்படுகின்றன - மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக்கணக்கில் மாண்டனர்.
இன்னொரு புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் குழந்தைகள் மரணம் நூற்றுக்கு 94 என்றால் கங்கை பாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும்.

பீகாரில் துர்காபூர், பொகாரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும், உரத் தொழிற்சாலைகளிலிருந்தும் அம்மோனியா, சயனைடு நைட்ரேட், முதலிய நச்சுக் கழிவுகள் ஏராளமாகக் கலக்கின்றன. பீகார் தலைநகரமான பாட்னாவில் மட்டும் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு மோட்சத்திற்குச் செத்தவர்களை அனுப்புவதற்காக(?) அந்தச் சாம்பல் கங்கைக்கரையில் கரைக்கப்படுகின்றன.
கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற்சாலை களின் ஒட்டு மொத்த கழிவுகளும் சங்கமம் ஆவது இந்துக்கள் புனிதம் என்று கூறுகிறார்களே - அந்தக் கங்கையில் தான்.

இவற்றை எல்லாம்விட இன்னும் அதிர்ச்சி தரும் தகவல்கள் உண்டு. கங்கை புனித நதி பாயும் பகுதிகளில் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

சுவிஸ் அரசின் நிதி உதவியால் இப்புனித நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுதான் இந்த அதிர்ச்சியான தகவலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. (தி பயணியர் 27.7.1997).
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (19.6.2003) வேறு பல ஒழுக்கக் கேடான தகவல்களை வாரி வாரி இறைத்துள்ளது.

via - Denald Robert.


ரிலாக்ஸ் ப்ளீஸ் (ஆங்கிலத்திலும் Relaxplzz)

Lady Finger - Easy Cure For Diabetes

Many people in the world are suffering from Diabetes. Here is an easy cure for diabetes. Lady finger a natural vegetable which can be used as a cure for diabetes. Instead of painful and expensive treatment available in the market 

Lady Finger An Easy Cure For Diabetes
How To Control Diabetes From Lady Finger?
Here is the simple tip to control diabetes from lady finger. Take two or three lady fingers. Cut them from the centre and put them into the glass full with the water. Leave them for the full night. In the morning remove lady finger and drink the water before breakfast. Repeating the same process every day will help you to reduce your sugar level. This simple tips is better than many other painful treatments. Fresh lady finger is better than cooked one. 

How Raw Lady Finger Can Help in curing Diabetes?
Low G.I Food: 
The word G.I stands for Glycemic index. The person who is suffering from diabetes should take diet enriched in Glycemic index. Approximately 20 G.I is present in okra. That is very low. Diabetic patients can easily use Okra recipes as their meal to fill their stomach and also control their diabetic level. 

Fight Kidney Diseases:
Lady finger is also good to prevent your body from different kidney diseases. It is considered that high sugar level effect your both kidneys badly. So by taking okra daily will prevent your kidneys. Have an moderate amount of okra daily if you are a diabetic person. 

Soluble Fibers: 
Soluble fibers are very important to keep your kidneys healthy. They play their role in digestion of carbohydrates. Lady finger is enriched with soluble fibers. It slow down the digestion process and hence lower the sugar level in blood. These are some of the main reasons for you to select lady finger as a diet to control diabetes.

Share with others

Wednesday, August 14, 2013

ஏன்னா இது சுதந்திர நாடு

1) ஏறி பயணம் செய்யிற பேருந்துல கல்லை விட்டு எறிவோம், எரிக்கவும் செய்வோம் ஏன்னா இது சுதந்திர நாடு.

2) ரோட்ல கண்ட கண்ட இடத்துல அசிங்கம் பண்ணுவோம், குப்பை கொட்டுவோம் ஏன்னா இது சுதந்திர நாடு.

3) சேலை, சுடிதார், மோர்டன் ஆடை இப்படி என்ன ஆடை போட்டாலும் அந்த பெண்னை கைபேசில படம் பிடிசுகிட்டே வரலாம், அத எவனும் தட்டி கேக்க முடியாது ஏன்னா இது சுதந்திர நாடு.

4) வேலை இல்லாதவன் பத்தாயிரம் ரூபா திருடினா சிறைல போடலாம், அரசாங்க வேலைல உள்ளவன் பத்தாயிரம் கோடி திருடினாலும் வெளிய சுத்தலாம் ஏன்னா இது சுதந்திர நாடு.

5) வீடு இல்லாதவன் புறம் போக்கு நிலத்துல அரையடி ஆக்கிரமிச்சா இடிக்க சட்டம் இருக்கு, பணக்காரன் ஆறு ஏக்கர் புறம் போக்க வளச்சு போட்டா சட்டமே மாற்றி அமைக்கப்பட்டு ஏன்னா இது சுதந்திர நாடு.

6) நடைபாதை உணவகத்துல சாப்பாட்டுல பூச்சி இருந்தா உணவு பாதுகாப்பு சட்டம் பாயும இதுவே அரசாங்க உணவு சேகரிப்பு கிடங்குள பூச்சிகள் இருந்த உணவு பாதுகாப்பு சட்டமே திருத்தி அமைக்கப் படும்... ஏன்னா இது சுதந்திர நாடு.

7) மாடா உழைச்சு நல்ல அரிசிய அரசாங்கத்துக்கு விப்பான் ஆனா மலிவுவிலை கடைகள் மூலமா நாறிப்போன அரிசிய தான் அரசாங்கம் உழவனுக்கு கொடுக்கும் அத இவன்னாலயும் தட்டி கேக்க முடியாது ஏன்னா இது சுதந்திர நாடு.

8 ) ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கி 67 வருடம் ஆச்சு ஆனா நீதி மன்றத்துல தமிழில் வழக்காட சுதந்திரம் வாங்கி ஒரு வருடம் கூட ஆகல, இதுவும் சுதந்திர நாடு.

9) இலங்கையில் லட்சகணக்கான இந்தியர்களை(தமிழர்கள்) கொன்னான் நடவடிக்கை எடுக்கல, அமெரிக்காவில் பத்து இந்தியர்களை(சீக்கியர்கள்) கொன்னா உடனே நடவடிக்கை எடுக்குறாங்க. யாரும் ஏன்னு கேக்க முடியாது ஏன்னா இது சுதந்திர நாடு.

10) இல்லாதவனுக்கு ஏற்றவாறு சட்டம் இயற்றாமல் அவனை இல்லாமல் ஆக்கத்தான் சட்டம் இயற்றுகிறார்கள். இதை கேட்க்க ஆளில்லை ஏன்னா இது சுதந்திர நாடு.

11) நம்ம வரிப்பனத்துல நமக்கே இலவசம் கொடுப்பான் அதையும் இலுச்சுகிட்டு வாங்கிகிட்டு அவனுக்கே ஓட்டு போடுவோம்..

என்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.

‪#‎நந்தமீனாள்‬
மதுரை.

Source -► தமிழால் இணைவோம்

பெண் புத்தி பின் புத்தி

Source  :  கனா காண்கிறேன்

இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும், காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், எங்கு எந்த பிரச்சனை வந்தாலும், அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும்.

பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள்.

இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.

# இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை, இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

தமிழர்களின் சாதனை


தமிழன் சாதித்த கட்டிடக்கலை!

இடம் : கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்

பிணமாக

Source  :  கனா காண்கிறேன்
பிழைப்பிற்காக கடலுக்குள் செல்வான்
பிணமாகக் கரைக்கு வருவான்
அவன் யார் ? 

என்று வருங்காலத்தில் 
யாரேனும் விடுகதைப் போட்டால் 
விடைச் சொல்லுங்கள்

"தமிழக மீனவன்" என்று.

நேசம் - LOVE

"நேசத்தின் புதிர் அவிழ்த்தல் நேசத்தால் மட்டுமே சாத்தியம்"

"Love alone can explain the mysteries of Love." 

 
~ Rumi 
Ilangovan Balakrishnan 

---------------------------------------

Source : தமிழ் -கருத்துக்களம்

இது சாத்தியமா

Source : ரிலாக்ஸ் ப்ளீஸ்

இது போன்ற இடத்தில் 
வீடு அமைந்திருந்தால் 
வாழ்வே சொர்க்கம் தானே... 
இன்றைய சூழலில் இது சாத்தியமா நண்பர்களே... ??

வீரவணக்கம்

இறந்த இந்திய வீரர்களுக்கு வீரவணக்கம்...!
நேதாஜி....வீரவணக்கம்...

ஹிட்லர் ஐரோப்பியத்தில் செய்ததை தான் பிரிட்டன் இந்தியாவில் செய்கிறது" என்றார் நேதாஜி....

இரண்டாம் உலகப்போரின் போது சிறிய நாடுகள் கூட கொள்கை ரீதியாக தங்கள் விரும்பிய பக்கம் சேர்ந்து ஒரு உக்கிரமான போர் மேடையில் தங்கள் வீரத்தை காட்டின.இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆங்கிலேயரை விரட்ட நினைத்தார் நேதாஜி. ஆனால் ஒரு மாபெரும் போர் நடந்த வரலாறு உடைய பாரதம் கண்மூடி தனமாக ஆங்கிலேயருக்கு ஆதரவு என்று காந்தியின் பெயரால் அறிவித்தது.

"லண்டன் மாநகரம் தாக்கப்பட்டால் அது நமக்கும் அவமானம்" என்றார் காந்தி. "முன்பு நமது இந்திய நகரங்கள் ஆங்கிலேயரால் தாக்கப்பட்டதை விட லண்டன் தாக்கப்படுவது தான் வருத்தப்பட கூடிய செயலா? நேதாஜி கேட்டார். "ஹிட்லரின் சர்வாதிகாரத்தை எதிர்த்தே இந்தியா களமிறங்குகிறது" என்றார் நேரு. ஹிட்லர் ஐரோப்பியத்தில் செய்ததை தான் பிரிட்டன் இந்தியாவில் செய்கிறது" என்றார் நேதாஜி. நேதாஜியின் எந்த கேள்விக்கும் பதிலே இல்லை.

இறுதியாக போருக்கு பின் காங்கிரஸ் நேதாஜியை பிடித்து தருவதாக உறுதி தந்து ஒரு கோழைத்தனமான சுதந்திரம் அடைந்தது. காங்கிரஸ் அன்றிலிருந்து இன்று வரை படை பலம் வாய்ந்த நமது ராணுவத்தை சரியான நேரத்தில் சரியாக பயன்படுத்தியதே இல்லை. சொந்த நாட்டின் மக்களை மிரட்டவும், அண்டைநாட்டில் போராடும் மக்களை கொல்லவும் மட்டுமே பயன்படுத்தியுள்ளது. இது தொடர்ந்தால் சீனா ஊடுருவுவதும், பாகிஸ்தான் சுடுவதும் தொடர்கதையாகிப்போகும். இறந்த இந்திய வீரர்களுக்கு வீரவணக்கம்...!

எதற்கு

"எங்களிடம் பிரமோஸ் இருக்கிறது
எங்களிடம் ப்ரித்வி இருக்கிறது
எங்களிடம் நிற்பாய் இருக்கிறது
எங்களிடம் அக்னி இருக்கிறது
என்று சொல்கிறீர்களே ...??

இதெல்லாம் இருக்கும் உங்களிடம்
சூடு சொரணை
என்று எதாவது இருக்கிறதா ???

உன் நாட்டு மீனவனை காக்க தெரியாத உங்களுக்கு
இத்தனை ஆயுதங்கள் எதற்கு ??"


நன்றி : R M Kumar
-------------------------------------------

இல்லாமல்

காரணம் இல்லாமல் 
சிரிக்கலாம்...! 

ஆனால் 

கவலை இல்லாமல்.. 
அழ முடியாது ...!! 

Source -► தமிழால் இணைவோம்

P.சக்திவேல் எனும் தனி மனிதர்

Source : தமிழ் -கருத்துக்களம் 

இது லைக் , கமென்ட்க்காக எழுதி tag செய்யவில்லை. விருப்பமிருந்தால் ஷேர் செய்யுங்கள்...


யாரோ ஒருவர் இந்த குழந்தைகளுக்கு தன்னால் முடிந்ததை உதவினால் அதில் நம்பங்கும் உண்டு என்ற சந்தோசத்தில் மட்டுமே எழுதுகிறேன்...

ஒருநிமிடம் நமக்கு உறவுகள் என்று யாருமில்லை என்று கற்பனை செய்து பார்த்துவிட்டு பிறகு படியுங்கள்...

எங்கள் திருமணநாள் அன்று ஒரு ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் இருப்பவர்களுக்கு ஒரு வேலை அன்னதானம் வழங்கலாமென்று முடிவெடுத்து இன்று சென்றிருந்தோம். அங்கு இருந்தவர்கள் எல்லாம் தன்னை பெற்றவர்கள் யாரென்றே தெரியாத குழந்தைகளும், தான் பெற்ற குழந்தைகளால், உறவுகளால் கைவிடப்பட்ட முதியோர்கலுமே (இதில் ஊனமுற்ற குழந்தைகளும் முதியவர்களும் உண்டு). இதை ( மத்திய அரசின் அனுமதியுடன் ) நிறுவி, 9 வருடங்களாக தனது சொந்த ஆர்வத்தால் நடத்தி வருபவர் * P . சக்திவேல்* எனும் தனி மனிதர்...

பணமிருந்தால் ஒருமாதத்திற்கு கூட நாம் அன்னதானம் அளிக்கலாம் ஆனால் மனமிருந்தால்தான் இதுபோல அமைப்புகளை நடத்தமுடியும் .( தற்போது 50 குழந்தைகள், 20 வயதானவர்களும் இந்த இல்லத்தில் இருகின்றனர்) குழந்தைகளின் அடிப்படை வசதி, பள்ளிக்கு அனுப்புவது, முதியவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் இவரே கவனிக்கிறார் . சில மனிதநேயங்களின் உதவியுடன்...

இது பெரிய ஆசிரமமோ , தொண்டு நிறுவனமோ கிடையாது ஒரு லிட்டர் பால் கூட தானமாக ஏற்கிறார்கள். சென்னை போன்ற மாநகரங்களில் இதுபோல் அமைப்புக்கு உதவ நிறைய பேர் இருகிறார்கள் கண்டிப்பாக நிறையபேர் உதவிருப்பீர்கள்...

எனக்கு இது புது அனுபவம் அதனால் உங்களுடன் பகிர்கிறேன் இதை படிக்கும் ஏதோ ஒரு மனிதநேயம் உதவநினைதால் கீழுள்ள முகவரியை, அலைபேசியை தொடர்புகொள்ளலாம் . உங்களின் ரூ 100 க்கும் அவர்களிடம் மதிப்பு உண்டு(சமையல் பொருள்கள், ஆடைகள் அனைத்தையும் பெறுகிறார்கள்...)

NOCOME TRUST"
#18, THENKARAI STREET, VADAMATTAM ROAD,
KARAIKAL - 609609
TEL: O4368- 266714, CELL 9047281743 ( Mr. P.SAKTHIVEL)

நன்றி : காரை செந்தில் குமார்.